- Johnpaul J
Devane Naan Umathandayil - தேவனே நான் உமதண்டையில்
Updated: May 11
தேவனே, நான் உமதண்டையில் – இன்னும் நெருங்கி சேர்வதே என் ஆவல் பூமியில்.
தேவனே, நான் உமதண்டையில் – இன்னும் நெருங்கி சேர்வதே என் ஆவல் பூமியில்.
மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான் கோவே, தொங்க நேரிடினும் ஆவலாய் உம்மண்டை சேர்வேன்
தேவனே, நான் உமதண்டையில் – இன்னும் நெருங்கி சேர்வதே என் ஆவல் பூமியில்.
1. யாக்கோபைப்போல், போகும் பாதையில் – பொழுது பட்டு இராவில் இருள் வந்து மூடிட
தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில் நோக்கி உம்மை கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா வல்ல நாதா!
தேவனே, நான் உமதண்டையில் – இன்னும் நெருங்கி சேர்வதே என் ஆவல் பூமியில்.
2. பரத்துக்கேறும் படிகள் போலவே – என் பாதை தோன்றப் பண்ணும் ஐயா, எந்தன் தேவனே,
கிருபையாக நீர் எனக்குத் தருவதெல்லாம் உமதண்டை அருமையாய் என்னை அழைக்கும் அன்பின் தூதனாகச் செய்யும்
தேவனே, நான் உமதண்டையில் – இன்னும் நெருங்கி சேர்வதே என் ஆவல் பூமியில்.
3. நித்திரையிலிருந்து விழித்துக் – காலை எழுந்து கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்;
இத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே, எந்தன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன்
தேவனே, நான் உமதண்டையில் – இன்னும் நெருங்கி சேர்வதே என் ஆவல் பூமியில்.
இன்னும் நெருங்கி
சேர்வதே என் ஆவல் பூமியில்...