top of page
  • Johnpaul J

Devane Naan Umathandayil - தேவனே நான் உமதண்டையில்

Updated: May 11

தேவனே, நான் உமதண்டையில் – இன்னும் நெருங்கி சேர்வதே என் ஆவல் பூமியில்.

தேவனே, நான் உமதண்டையில் – இன்னும் நெருங்கி சேர்வதே என் ஆவல் பூமியில்.

மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான் கோவே, தொங்க நேரிடினும் ஆவலாய் உம்மண்டை சேர்வேன்

தேவனே, நான் உமதண்டையில் – இன்னும் நெருங்கி சேர்வதே என் ஆவல் பூமியில்.

1. யாக்கோபைப்போல், போகும் பாதையில் – பொழுது பட்டு இராவில் இருள் வந்து மூடிட

தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில் நோக்கி உம்மை கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா வல்ல நாதா!

தேவனே, நான் உமதண்டையில் – இன்னும் நெருங்கி சேர்வதே என் ஆவல் பூமியில்.

2. பரத்துக்கேறும் படிகள் போலவே – என் பாதை தோன்றப் பண்ணும் ஐயா, எந்தன் தேவனே,

கிருபையாக நீர் எனக்குத் தருவதெல்லாம் உமதண்டை அருமையாய் என்னை அழைக்கும் அன்பின் தூதனாகச் செய்யும்

தேவனே, நான் உமதண்டையில் – இன்னும் நெருங்கி சேர்வதே என் ஆவல் பூமியில்.

3. நித்திரையிலிருந்து விழித்துக் – காலை எழுந்து கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்;

இத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே, எந்தன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன்

தேவனே, நான் உமதண்டையில் – இன்னும் நெருங்கி சேர்வதே என் ஆவல் பூமியில்.

இன்னும் நெருங்கி

சேர்வதே என் ஆவல் பூமியில்...




2 views0 comments

Recent Posts

See All

இயேசுவே உம்மைப்போலாக வாஞ்சிக்குதே என்னுள்ளம் இயேசுவே உம்மைப்போலாக வாஞ்சிக்குதே என்னுள்ளம் பாவமறியாது பாவமே செய்யாது பாரினில் ஜீவித்தீரே பாவமறியாது பாவமே செய்யாது பாரினில் ஜீவித்தீரே பரிசுத்தர் உம்மைப்

தொடும் என் கண்களையே உம்மை நான் காண வேண்டுமே இயேசுவே உம்மை நான் காண வேண்டுமே தொடும் என் காதுகளை உம் குரல் கேட்க வேண்டுமே இயேசுவே உம் குரலை கேட்க வேண்டுமே தொடும் என் ஆண்டவரே தொடும் என் வாழ்வினையே இயேசுவ

திருக்கரத்தால் தாங்கி என்னை திருச்சித்தம் போல் நடத்திடுமே குயவன் கையில் களிமண் நான் அனுதினமும் வனைந்திடுமே குயவன் கையில் களிமண் நான் அனுதினமும் வனைந்திடுமே ஆழ்கடலில் அலைகளினால் அசையும்போது என் படகில்

bottom of page